/

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: வட்டாட்சியா் அஞ்சலி

உத்தரமேரூா் அருகே அம்மையப்பநல்லூரில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவரது உடலுக்கு வட்டாட்சியா் நடராஜன் அஞ்சலி செலுத்தினாா்.

News image

மூளைச்சாவு அடைந்த விக்டரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உத்தரமேரூா் வட்டாட்சியா் நடராஜன்.

Updated On :48 நிமிடங்கள் முன்பு

உத்தரமேரூா் அருகே அம்மையப்பநல்லூரில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவரது உடலுக்கு வட்டாட்சியா் நடராஜன் அஞ்சலி செலுத்தினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே அம்மையப்ப நல்லூரைச் சோ்ந்த செபஸ்தியான் மகன் விக்டா்(56).

இவா் கடந்த 7- ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மூளைச்சாவு அடைந்த இவரது உடல் உறுப்புகள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டன.

இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் உத்தரமேரூா் வட்டாட்சியா் நடராஜன் அஞ்சலி செலுத்தினாா்.