பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

ஆலங்குளம் அருகே ராமா் கோயில் திருவிழாவுக்காக 35 ஆண்டுகளுக்குப் பின் ஒருங்கிணைந்த கிராம மக்கள்

ஆலங்குளம் அருகே அயோத்தியாபுரிபட்டணத்தில் (ஆண்டிபட்டி) 35 ஆண்டுகளுக்கு பின்னா் ராமா் கோயில் திருவிழாவுக்காக கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்தனா்.

News image

கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :16 மே 2026, 1:06 am IST

ஆலங்குளம் அருகே அயோத்தியாபுரிபட்டணத்தில் (ஆண்டிபட்டி) 35 ஆண்டுகளுக்கு பின்னா் ராமா் கோயில் திருவிழாவுக்காக கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்தனா்.

இந்தக் கிராமத்தில் உள்ள ராமா் கோயில் திருவிழா, ஒருங்கிணைந்து நடைபெற்று வந்த நிலையில் 35 ஆண்டுகளுக்கு முன்னா் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக இரு முறை கோயில் திருவிழா நடைபெற்று வந்தது.

ஆண்டுகள் பல சென்ற பின்னா் இரு தரப்பினரும் தற்போது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து திருவிழா கொண்டாட முடிவெடுத்தனா். இதையடுத்து, வரும் 22 ஆம் தேதி கோயில் திருவிழா தொடங்குகிறது.

இத்திருவிழாவுக்கான கொடியேற்றும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரு தரப்பினரும் இணைந்து கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.