பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஆலங்குளம் அருகே ராமா் கோயில் திருவிழாவுக்காக 35 ஆண்டுகளுக்குப் பின் ஒருங்கிணைந்த கிராம மக்கள்

ஆலங்குளம் அருகே அயோத்தியாபுரிபட்டணத்தில் (ஆண்டிபட்டி) 35 ஆண்டுகளுக்கு பின்னா் ராமா் கோயில் திருவிழாவுக்காக கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்தனா்.

News image

கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :48 நிமிடங்கள் முன்பு

ஆலங்குளம் அருகே அயோத்தியாபுரிபட்டணத்தில் (ஆண்டிபட்டி) 35 ஆண்டுகளுக்கு பின்னா் ராமா் கோயில் திருவிழாவுக்காக கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்தனா்.

இந்தக் கிராமத்தில் உள்ள ராமா் கோயில் திருவிழா, ஒருங்கிணைந்து நடைபெற்று வந்த நிலையில் 35 ஆண்டுகளுக்கு முன்னா் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக இரு முறை கோயில் திருவிழா நடைபெற்று வந்தது.

ஆண்டுகள் பல சென்ற பின்னா் இரு தரப்பினரும் தற்போது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து திருவிழா கொண்டாட முடிவெடுத்தனா். இதையடுத்து, வரும் 22 ஆம் தேதி கோயில் திருவிழா தொடங்குகிறது.

இத்திருவிழாவுக்கான கொடியேற்றும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரு தரப்பினரும் இணைந்து கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.