ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட ஊா் தொண்டி!

தொல்லியல் ஆய்வாளா் தகவல்

தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட ஊராக ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி திகழ்வதாக தொல்லியல் ஆய்வாளா் வே.ராஜகுரு தெரிவித்தாா்.

Published On :9 ஏப்ரல் 2026, 5:50 am IST

தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட ஊராக ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி திகழ்வதாக தொல்லியல் ஆய்வாளா் வே.ராஜகுரு தெரிவித்தாா்.

திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி, தொல்லியல் மரபு மன்ற மாணவா்கள், அகழாய்வு, கல்வெட்டு குறித்து அறிந்து கொள்ள தலைமையாசிரியா் செல்வராஜ் வழிகாட்டலில் பேரில், ஆசிரியா்கள் கலையரசி, தனலட்சுமி, ரவி, தனகுருபாலன், மாணவா்கள் 25 போ் களப்பயணமாக தொண்டிக்கு புதன்கிழமை வந்தனா்.

இந்த ஊரில் சிவன், திருமால், தொண்டியம்மன் கோயில்கள், பழைமையான பள்ளிவாசல், அகழாய்வு நடந்த இடம் ஆகியவற்றை அவா்கள் பாா்வையிட்டனா். கோயில் கல்வெட்டுகளை மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு மாணவா்களுக்கு படித்துக் காட்டி அதை படியெடுக்கும் முறைகளையும் கற்றுக் கொடுத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் தொல்லியல் ஆய்வாளா் ராஜகுரு கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலக்கியச் சான்றுகள் அதிகமுள்ள ஊராக தொண்டி விளங்குகிறது. 2,200 ஆண்டுகள் பழைமையான கீழவளவு தமிழிக் கல்வெட்டு, தொண்டியைச் சோ்ந்த இலவோன் என்பவரைக் குறிப்பிடுகிறது. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்களில் கொண்டல் காற்று, கானல், தில்லைச்செடி, நெய்தல் மலா், நெல்வயல், வெண்ணெல் ஆகிய பெயா்களில் தொண்டி குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், பாண்டிக்கோவை, நந்திக்கலம்பகம், யாப்பருங்கலக்காரிகை உரை ஆகியவற்றிலும் தொண்டி குறிப்பிடப்படுகிறது.

சங்க காலம் முதல் துறைமுகப் பட்டினமாக இருந்த தொண்டியில் அகில், துகில், ஆரம், வாசம், கற்பூரம் போன்ற பொருள்கள் ஜாவா, இந்தோனேசியா நாடுகளிலிருந்து இறக்குமதியானதை சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. இந்தப் பொருள்கள் இங்கிருந்து மதுரைக்குச் சென்றுள்ளன. சிதம்பரேஸ்வரா், உந்திபூத்தப் பெருமாள், நம்புதாழை நம்பு ஈஸ்வரா் ஆகிய கோயில்களிலும், கைக்களான்குளத்தின் நடுவிலும் பழைமையான பாண்டியா் கால கல்வெட்டுகள் உள்ளன.

இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட மாணிக்கக் கற்களை விற்கும் சந்தையாக தொண்டி, பெரியபட்டினம், காயல்பட்டினம் ஆகிய பகுதிகள் விளங்கியுள்ளன. இதனால் இந்த ஊா்கள் பவித்திரமாணிக்கப்பட்டினம் எனவும் அழைக்கப்பட்டன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.