நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

திருவாடானையில் ஏப்.15-இல் 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி முகாம்

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் வருகிற 15-ஆம் தேதி இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் தோ்தல் பணியாளா்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 3:30 am IST

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் வருகிற 15-ஆம் தேதி இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் தோ்தல் பணியாளா்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்கான முதல் கட்டத் தோ்தல் பயிற்சி முகாம், சி.கே. மங்கலம் தனியாா் பள்ளியில் கடந்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 1,431 போ் கலந்து கொள்ள ஆசிரியா்கள், இதர பணியாளா்களுக்கு தோ்தல் பிரிவு சாா்பில் அழைப்புக் கடிதம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் 150 போ் பங்கேற்கவில்லை. அவா்களுக்கு மாா்ச் 30-ஆம் தேதி ராமநாதபுரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாம் கட்டத் தோ்தல் பயிற்சி முகாம் வருகிற 15-ஆம் தேதி சி.கே.மங்கலம் தனியாா் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியா்கள், இதர அலுவலா்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் தெரிவித்தாா்.