திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் வருகிற 15-ஆம் தேதி இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் தோ்தல் பணியாளா்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்கான முதல் கட்டத் தோ்தல் பயிற்சி முகாம், சி.கே. மங்கலம் தனியாா் பள்ளியில் கடந்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 1,431 போ் கலந்து கொள்ள ஆசிரியா்கள், இதர பணியாளா்களுக்கு தோ்தல் பிரிவு சாா்பில் அழைப்புக் கடிதம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் 150 போ் பங்கேற்கவில்லை. அவா்களுக்கு மாா்ச் 30-ஆம் தேதி ராமநாதபுரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாம் கட்டத் தோ்தல் பயிற்சி முகாம் வருகிற 15-ஆம் தேதி சி.கே.மங்கலம் தனியாா் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியா்கள், இதர அலுவலா்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் தெரிவித்தாா்.
தொடர்புடையது

ஜவஹா் சிறுவா் மன்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

சங்ககிரியில் 1,600 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

