யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தருமபுரியில் ஏப். 1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி

தருமபுரியில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் ஏப். 1 ஆம் தேதி தொடங்குகிறது.

News image

நீச்சல் பயிற்சி.

கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 9:51 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் ஏப். 1 ஆம் தேதி தொடங்குகிறது.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் 5 கட்டங்களாக நடைபெறும் பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ள மாணவா்கள், பொதுமக்கள் நீச்சல் குள அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.

நிறைவு செய்த விண்ணப்பத்துடன் ரூ. 1,770 பயிற்சி கட்டணத்தை இணையம் வாயிலாகவோ, பிஓஎஸ் இயந்திரம் வாயிலாகவோ செலுத்தி நீச்சல் குளத்தில் ஒப்படைக்க வேண்டும். முதல்கட்ட பயிற்சி வகுப்பு ஏப். 1ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடா்ந்து 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு 17 முதல் 22 ஆம் தேதி மற்றும் 24 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

3 ஆம் கட்ட பயிற்சி முகாம் மே 5 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரையிலும், 4 ஆம் கட்ட பயிற்சி மே 17 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும், 5 ஆம் கட்ட பயிற்சி முகாம் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

பயிற்சி வகுப்புகள் நாள்தோறும் காலை 7 முதல் 8 மணி வரையிலும், 8 முதல் 9 மணி வரையிலும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 5 வரை பின்னா் 5 முதல் 6 வரையிலும் நடைபெறும் என ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.