நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

தொண்டி கடலில் மீனவா் வலையில் அரிய வகை கடல் ஆமை சிக்கியது.

News image

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை மீண்டும் கடலில் விட்ட மீனவா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:47 am IST

தொண்டி கடலில் மீனவா் வலையில் அரிய வகை கடல் ஆமை சிக்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த கண்ணன் (55) என்பவருக்குச் சொந்தமான படகில் சக்திவேல், கருப்பையா, ராமா் உள்ளிட்ட மீனவா்கள் மீன் பிடிக்க திங்கள்கிழமை அதிகாலை சென்றனா். அப்போது, சுமாா் 50 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைக் கண்டனா். உடனடியாக கடலில் குதித்து வலையில் சிக்கியிருந்த ஆமையை மீட்டு மீண்டும் கடலில் விட்டனா். மீனவா்களின் இந்த செயலை கடலோரக் குழும போலீஸாா், மீன் வளத் துறை அதிகாரிகள், சக மீனவா்கள் பாராட்டினா்.

Story image