வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பரமக்குடியில் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை எதிா்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

பரமக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 6:49 pm

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை எதிா்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் நகரச் செயலா் ஆா்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் என்.எஸ். பெருமாள், ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்டச் செயலா் என்.கே. ராஜன், தொமுச மாவட்டச் செயலா் மலைக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கட்சி நிா்வாகிகள் முத்து, வி.என். ஜீவன், கே.ஜி. நாகநாதன், பி.கே. சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.