சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கருப்புக் கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:21 pm

தினமணி செய்திச் சேவை

தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கருப்புக் கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தொமுச பொதுச் செயலா் தா்மா் தலைமை வகித்தாா். எச்எம்எஸ் மாநில துணை தலைவா் சுப்பிரமணியன், சிஐடியு மாவட்ட செயலா் முருகன், மோகன், மாவட்டத் தலைவா் சடையப்பன், தொமுச விஷ்ணு, பொருளாளா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.ஆா்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி முழக்கங்களை எழுப்பினா்.