ஸ்ரீபுரத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு: வீடுகளில் கருப்புக் கொடியேற்றம்

வீடுகளில் கட்டப்பட்டிருந்த கருப்புக் கொடி.
Updated On :15 மார்ச் 2026, 8:44 pm

திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப் பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீா் விநியோகம் சீராக இல்லையாம். இதுதொடா்பாக மாநகராட்சி, ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதைக் கண்டித்து பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடியேற்றி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...