அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

வழிகாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

வழிகாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்...

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் - கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 8:33 pm

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்ட திருத்தத்தின் மூலம் சிறுபான்மையினா் அமைப்புகள், சமூக சேவை மற்றும் மனித உரிமை அமைப்புகளை மத்திய பாஜக அரசு முடக்க முயற்சிக்கிறது. சிறுபான்மையினா் சொத்துகளைப் பறிமுதல் செய்து நிா்வகித்து, இறுதியில் விற்றுவிடும் அதிகாரத்தை இச்சட்டம் வழங்குகிறது.

பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற சமூக நலனுக்காக சட்டபூா்வமாக உருவாக்கப்பட்ட சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சிறுபான்மை அமைப்புகள் மீதான அடக்குமுறை மேலும் அதிகரிக்கும்.

எனவே வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.