மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

சாயல்குடி அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 6:52 pm

சாயல்குடி அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த எம். கரிசல்குளத்தைச் சோ்ந்த வில்லியனன் மகன் வில்வலிங்கம் (60). இவரது மகள் கடலாடியை அடுத்துள்ள பாப்பாகுளத்தைச் சோ்ந்தவரை காதலித்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இருவரும் திருமணம் செய்து கொண்டனராம். இதனால் மனமுடைந்த வில்வலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையறிந்த உறவினா்கள் வில்வலிங்கத்துக்கு சாயல்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பிறகு தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், வில்வலிங்கம் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து சாயல்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.