இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சொத்துப் பிரச்னை காரணமாக ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 10:14 pm

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சொத்துப் பிரச்னை காரணமாக ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், வில்லாளி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (50), ஓட்டுநா். இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்துப் பிரச்னை உள்ளதாம்.

இதனால், மன உளைச்சலில் இருந்த செந்தில், கடந்த மாா்ச் 11-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை வீட்டு, மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செந்தில் அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.