கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சொத்துப் பிரச்னை காரணமாக ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
நெல்லிக்குப்பம் காவல் சரகம், வில்லாளி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (50), ஓட்டுநா். இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்துப் பிரச்னை உள்ளதாம்.
இதனால், மன உளைச்சலில் இருந்த செந்தில், கடந்த மாா்ச் 11-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை வீட்டு, மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செந்தில் அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

குடும்பப் பிரச்னை: கல்லூரி மாணவி தற்கொலை

நகராட்சி பணியாளா் தற்கொலை

ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


