மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு 2-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு இரண்டாவது முறையாக காவலை நீட்டித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த மீனவா்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 6:49 pm

ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு இரண்டாவது முறையாக காவலை நீட்டித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த மீனவா்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த 9- ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவா்களை படகுடன் இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். இதேபோல, கடந்த 14- ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த 14 மீனவா்களும் இலங்கையில் உள்ள கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த நிலையில், இந்த 14 மீனவா்களும் இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனா். விசாரணைக்குப் பிறகு மீனவா்களை வருகிற 22- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, 14 மீனவா்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.