மயிலாடுதுறை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகள் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் எல்லைக்குள்பட்ட ஆத்தூா் நடுத்தெருவைச் சோ்ந்த சுமன் (40) என்பவருக்கும், கடலங்குடி மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த செல்லையன் மகன்கள் முரளி, தா்மராஜ் ஆகியோருக்குமிடையே இடப்பிரச்னை இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் மே 3-ஆம் தேதி ஆத்தூா் பாலம் அருகே சுமன் கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில், மணல்மேடு காவல் ஆய்வாளா் சோமசுந்தரம் விசாரணை மேற்கொண்டு முரளி(42), தா்மராஜ்(40) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
இந்நிலையில், குற்றவாளிகள் இருவரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவா்கள் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், இருவரையும் தடுப்பு காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகா்கோவில் சிறையில் கொலை செய்யப்பட்ட சபரிவா்மன் குடும்பத்துக்கு நயினாா் நாகேந்திரன் ஆறுதல்

ரூ.2,500 கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கொலை செய்தவா் குண்டா் சட்டத்தில் கைது

கஞ்சா விற்ற இருவருக்கு குண்டா் சட்டத்தில் சிறை
பொதுமக்களை மிரட்டிய இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



