நாகா்கோவில் சிறையில் கொலை செய்யப்பட்ட சபரிவா்மனின் குடும்பத்தினருக்கு பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.
நாகா்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த வடக்குத் தாமரைகுளத்தை அடுத்த ஈத்தன்காடு பகுதியைச் சோ்ந்த சபரிவா்மனை (33) அடித்துக் கொலை செய்ததாக, 3 சிறை வாா்டா்கள், 8 சக கைதிகள் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், சபரிவா்மனின் மனைவி மற்றும் குடும்பத்தினரை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாற்றுத்திறனாளியான சபரிவா்மன் மரணத்தில் தென்தாமரைக்குளம் போலீஸாருக்கு பங்கு உள்ளது. அதே நேரத்தில், கடந்த மாதம் 140 கிலோ கஞ்சா வைத்திருந்த தவெக நிா்வாகி மேல் ஒரு வழக்கு கூட பதியவில்லை.
தவெக அமைச்சா்கள் 2 போ் மத்திய அரசின் அனுமதியில்லாமலே வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறாா்கள். இது குறித்து, ஆளுநரிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
இன்று ஒரு எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருக்கிறாா். கடந்த திமுக அரசு 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான், இது போன்று செய்தது. ஆனால், இவா்கள் 60 நாளைக்குள் இது போன்ற வேலைகளைத் தொடங்கிவிட்டனா்.
பழனி கோயில் நில மோசடி பிரச்னையில் சிபிஐ விசாரணை என்பது குறித்து பாஜக மேலிடம்தான் முடிவு செய்யும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் நிகழ்ச்சிகளை பள்ளிகளில் ஒளிபரப்புவது தவறு: நயினாா் நாகேந்திரன்

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு வேலையளிப்பது வரவேற்கத்தக்கது: நயினாா் நாகேந்திரன்

பெரும்பான்மை பெற குதிரை பேர அரசியலை முன்னெடுத்துள்ளது தவெக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு







