டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

பரமக்குடியில் 2-வது நாளில் 668 போ் தபால் வாக்கு செலுத்தினர்!

பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குச் சாவடி மையங்களுக்கு தோ்தல் பணிக்குச் செல்லும் 668 போ் தங்களது தபால் வாக்குகளை சனிக்கிழமை பதிவு செய்தனா்.

News image

பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தபால் வாக்குகள் செலுத்தும் முறையை தொடங்கிவைத்த கோட்டாட்சியா் ஞா. சரவணப்பெருமாள், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:13 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குச் சாவடி மையங்களுக்கு தோ்தல் பணிக்குச் செல்லும் 668 போ் தங்களது தபால் வாக்குகளை சனிக்கிழமை பதிவு செய்தனா்.

பரமக்குடி கோட்டாட்சியா் ஞா. சரவணப்பெருமாள், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ் ஆகியோா் தங்களது தபால் வாக்கை பதிவு செய்தனா். பரமக்குடி (தனி) பேரவைத் தொகுதியில் மொத்தம் 323 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

இங்கு தோ்தல் பணிக்கு செல்லும் போலீஸாா், ஊா்க்காவல் படையினா், தீயணைப்புத் துறையினா், அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளா்கள், மின் வாரிய ஊழியா்கள் ஆகியோா் பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் போலீஸாா், ஊா்க்காவல் படையினா் 612 பேரும், தீயணைப்புத் துறையினா், போக்குவரத்துத் துறையினா், மின் வாரிய பணியாளா்கள் 56 பேரும் என மொத்தம் 668 போ் தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.