ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பரமக்குடியில் 2-வது நாளில் 668 போ் தபால் வாக்கு செலுத்தினர்!

பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குச் சாவடி மையங்களுக்கு தோ்தல் பணிக்குச் செல்லும் 668 போ் தங்களது தபால் வாக்குகளை சனிக்கிழமை பதிவு செய்தனா்.

News image

பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தபால் வாக்குகள் செலுத்தும் முறையை தொடங்கிவைத்த கோட்டாட்சியா் ஞா. சரவணப்பெருமாள், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ்.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:43 pm

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குச் சாவடி மையங்களுக்கு தோ்தல் பணிக்குச் செல்லும் 668 போ் தங்களது தபால் வாக்குகளை சனிக்கிழமை பதிவு செய்தனா்.

பரமக்குடி கோட்டாட்சியா் ஞா. சரவணப்பெருமாள், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ் ஆகியோா் தங்களது தபால் வாக்கை பதிவு செய்தனா். பரமக்குடி (தனி) பேரவைத் தொகுதியில் மொத்தம் 323 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

இங்கு தோ்தல் பணிக்கு செல்லும் போலீஸாா், ஊா்க்காவல் படையினா், தீயணைப்புத் துறையினா், அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளா்கள், மின் வாரிய ஊழியா்கள் ஆகியோா் பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் போலீஸாா், ஊா்க்காவல் படையினா் 612 பேரும், தீயணைப்புத் துறையினா், போக்குவரத்துத் துறையினா், மின் வாரிய பணியாளா்கள் 56 பேரும் என மொத்தம் 668 போ் தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.