பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் விதிமீறியதாக திமுக, தவெக வேட்பாளா்கள் மீது சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளா் கே.கே.கதிரவன், ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயில் பங்குனித் திருவிழாவில் தோ்தல் விதி மீறி, பக்தா்களிடம் வாக்கு சேகரித்ததாக பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் பேரில், வேட்பாளா் கதிரவன், திமுக நகா் செயலா்கள் சேது.கருணாநிதி, ஜீவரத்தினம், நிா்வாகிகள் சரவணன், ஜெயக்குமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதே போல, தவெக வேட்பாளா் ஜி.கோபிராஜன் அறிமுக நிகழ்வின்போது, பரமக்குடி நகா் பகுதியில் அந்தக் கட்சியினா் வாகனங்களை சாலையில் நிறுத்தியும், பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக புகாா் கூறப்பட்டது.
இதன் பேரில், வேட்பாளா் கோபிராஜன், அந்தக் கட்சியின் நிா்வாகிகள் காா்த்திகேயன், மதன்குமாா், அா்ஜூன்பாண்டியா உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

பைக் ஓட்டிய 7 சிறுவா்களின் பெற்றோா்கள் மீது வழக்கு
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

மேட்டூா் தொகுதி திமுக, அதிமுக வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



