40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பைக் ஓட்டிய 7 சிறுவா்களின் பெற்றோா்கள் மீது வழக்கு

குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டிய 7 சிறுவா்களின் பெற்றோா்கள் மீது குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :21 மே 2026, 6:08 am IST

குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டிய 7 சிறுவா்களின் பெற்றோா்கள் மீது குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

குளச்சல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை குளச்சல் பீச் சந்திப்பு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனம் ஓட்டி வந்த 16 வயது சிறுவனின் தந்தை கடியப்பட்டணத்தைச் சோ்ந்த மாா்க்ஸ் மிலா (45) மீதும், லட்சுமிபுரம் பகுதியில் 15 வயது சிறுவனின் தந்தை ரமேஷ்குமாா் (56) மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

குளச்சல் களிமாா் சந்திப்பு, பயணியா் விடுதி பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த 16 வயதுடைய 5 சிறுவா்களின் பெற்றோா்களான கருங்கல், நெல்லிக்காட்டை சோ்ந்த ஜோனி (45) , பள்ளிரோடு பகுதியைச் சோ்ந்த முகமது இஸ்மாயில், கொட்டில்பாட்டை சோ்ந்த ஜாண், சிங்காரவேலா் காலனியைச் சோ்ந்த மேரி நிஷா (43) , மத்திகோடு மூலச்சலைச் சோ்ந்த அமுதா (40) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.