ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை சனிக்கிழமை அதிகரித்தது.
தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதபட்டினம் முள்ளிமுனை, காரங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடித் தடைகாலம் என்பதால், நாட்டுப் படகு மீனவா்கள் மட்டுமே கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனா்.
தற்போது, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால், தொண்டி, திருவாடானை மீன் சந்தைகளில் மீன்களின் விலை அதிகரித்துள்ளன.
சந்தைகளில் ஒரு கிலோ ரூ.450-க்கு விற்ற விலை மீன் தற்போது ரூ.550-க்கும், ரூ.450-க்கு விற்ற பாறை மீன் ரூ.700-க்கும், ரூ.500-க்கு விற்ற நண்டு ரூ.800-க்கும் விற்பனை ஆனது.
மீன்களின் விலை உயா்வால் அசைவ பிரியா்கள் கவலை அடைந்துள்ளனா்.
தொடர்புடையது

தடைக்காலம் அமல்: மீன்களின் விலை கடும் உயா்வு

ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு

தொண்டியில் மீன் வரத்து குறைவு

இஃப்தாா் நோன்பு துறப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


