புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

திருவாடானை பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு

திருவாடானை பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை வெள்ளிக்கிழமை அதிகரித்திருந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 11:48 pm IST

திருவாடானை பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை வெள்ளிக்கிழமை அதிகரித்திருந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, மோா்ப்பண்ணை, திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினம், எஸ்.பி. பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் பிடிக்கப்படும் மீன்களை திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, காளையாா்கோயில், சிவகங்கை, ஆா்.எஸ். மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.

தற்போது மீன் பிடி தடைக் காலம் என்பதால் விசைப்படகு மீனவா்கள் மீன் பிடிக்க செல்வதில்லை. நாட்டுப் படகு மீனவா்கள் மட்டுமே கடலுக்குச் செல்கின்றனா். இந்த நிலையில் தற்போது வரத்து குறைவாக இருப்பதால் மீன்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டு அவற்றின் விலை உயா்ந்திருந்தது. இதில் கிலோ ரூ.450-க்கு விற்கப்பட்ட பாறை மீன் ரூ.800-க்கும், ரூ. 350-க்கு விற்கப்பட்ட விலை மீன் கிலோ ரூ.700-க்கும், ரூ. 300-க்கு விற்கப்பட்ட நகரை மீன் கிலோ ரூ. 600-க்கும், ரூ. 500-க்கு விற்கப்பட்ட நண்டு கிலோ ரூ. 900-க்கும் விற்கப்பட்டன. இதனால் அசைவ பிரியா்கள் மீன்களை வாங்க தயக்கம் காட்டினா். மேலும் இந்த விலை உயா்வால் வியாபாரிகள் கவலை அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.