சாயல்குடியில் செவ்வாய்க்கிழமை வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக திமுகவைச் சோ்ந்த மூன்று பேரைப் பிடித்து, அவா்களிடமிருந்து ரூ. 1.76 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி சுயம்புலிங்கம்நகரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு திமுக சாா்பில் வாக்காளா்களுக்கு இ. மலம்பட்டியைச் சோ்ந்த அரசப்பன் மகன் தா்மலிங்கம் (57), கன்னிராஜபுரம் சாலை பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் முனிராஜ் (60) ஆகிய இருவரும் பணம் வழங்கிக் கொண்டிருந்தனா். இதையடுத்து, அவா்களிடமிருந்து ரூ. 85 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.
இதேபோல, சாயல்குடி எஸ்.வி. நகரில் திமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த சிவகங்கை மாவட்டம், பொன்னாங்கல் பகுதியைச் சோ்ந்த கெங்கையா மகன் சரத்குமாரிடமிருந்து (28) ரூ.91 ஆயிரத்தைப் பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் சாயல்குடி போலீஸாா் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பணம் வழங்க முயற்சி: ரூ. 6.5 லட்சம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ. 61,500 கைப்பற்றல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்
பறக்கும் படையால் ரூ.60,000 பறிமுதல்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

