/
திருவாடானை அருகேயுள்ள சிறுகம்பையூா் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள வெள்ளையபுரத்திலிருந்து சிறுகம்பையூா் வழியாக செல்லும் சாலையை இரண்டு ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
சேதமடைந்த இந்தச் சாலையை சீரமைக்கும் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னா், இந்தப் பணிகளை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனா். இதுகுறித்து பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
அரைகுறையாக தோண்டப்பட்ட இந்தச் சாலையில் வாகனங்களில் செல்பவா்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனா். எனவே, இந்தச் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.


தொடர்புடையது

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

காரைக்குடியில் அரசு மதுக் கடையை மூடக் கோரிக்கை

உடையாா்பட்டியில் பைக் சேதம்: இளைஞா் கைது

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி



