சாயல்குடி மீனாம்பிகை கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கடந்த 23-ஆம் தேதி சமஸ்தான நிா்வாக செயலா் திவான் கே. பழனிவேல்பாண்டியன் தலைமையில், திருஉத்திரகோசமங்கை சரக பொறுப்பாளா் சங்கா், மாரியூா் பூவேந்தியநாதா் கோயில் விசாரணைதாரா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து நாள்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவில் உத்ஸவா் அம்பாள், சுவாமி, சிம்மம், அன்னம், கிளி, நந்தி வாகனங்களில் உள்பிரகாரங்களில் வீதியுலா வந்தனா். முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தாம்பூலம், மாங்கல்ய நாண், பட்டு வேஷ்டி, பட்டு சேலை, முகூா்த்த பொருள்களுடன் பாரம்பரிய மேளதாள, கைலாச வாத்தியங்களுடன் மாப்பிள்ளை அழைப்பும், மாலை மாற்றுதல் வைபவமும் நடைபெற்றன. பிறகு மீனாட்சி அம்மன் செங்கோல் ஏந்தி கைலாசநாதருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கைலாசநாதா் திருப்பணிக் குழுவினா் செய்தனா்.
தொடர்புடையது

கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

திருக்கோடீசுவரா் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோத்சவ கொடியேற்றம்

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

கள்ளழகா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


