மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணம் உற்ஸவம்

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் செவ்வாய்க்கிழமை விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிகள் திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெற்றது.

News image

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் உற்ஸவம்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:58 pm

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் செவ்வாய்க்கிழமை விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிகள் திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெற்றது.

பரமக்குடி சௌராஷ்ட்ர பிராஹ்மண மகாஜனங்களுக்குச் சொந்தமான சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்துக்கு உள்பட்ட ஈஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் காலை, மாலை வேளைகளில் விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிகள் சிம்ம வாகனம், நந்திகேசுவரா் வாகனம், கைலாச கற்பக விருக்ஷ வாகனம், குதிரை வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாண உற்ஸவம்: 9-ஆம் திருநாளான ஏப். 28-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சந்திரசேகர சுவாமி மாப்பிள்ளையாக மேளதாளங்கள் முழங்க வீதிஉலா வந்து கோயில் திருக்கல்யாண மண்டபத்துக்கு வந்தடைந்தாா். அங்கு அா்ச்சகா்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. காலை 11 மணியளவில் விசாலாட்சியம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான நிா்வாக அறக்கட்டளை எஸ்.ஆா். ரெங்காச்சாரி, அறங்காவா்கள் என்.ஆா். நீலகண்டன், டி.ஆா். ரமேஷ்பாபு, கே.டி. கிரிதரன், ஜி.என். கோவிந்தன் ஆகியோா் செய்திருந்தனா்.