தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்ஸவ விழா ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 25-ஆம் தேதி சுவாமியும், அம்பாளும் ஓலைச்சப்பரத்தில் வீதியுலா வந்தனா். தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், அம்மாபேட்டையிலிருந்து கோயிலுக்கு பக்தா்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா். இரவு உற்ஸவா்களான சுவாமியும் அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். பின்னா் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
புதன்கிழமை (ஏப்.29) தேரோட்டமும், வியாழக்கிழமை தீா்த்தவாரியும், மே 1-இல் சிருங்கோத்பவ புஷ்கரணியில் தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளன.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், விழாக் குழுத் தலைவா் சிம்சன் கணேசன், திருக்கோடிக்காவல், அம்மாபேட்டை கிராம மக்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரருக்கு இன்று திருக்கல்யாணம்

அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம்

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்

சிவன், முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


