தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம் மற்றும் சிவஜோதி தரிசனம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

Updated On :3 ஜூன் 2026, 6:34 am IST

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம் மற்றும் சிவஜோதி தரிசனம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட  திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய சிவலோக தியாகேசா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சந்நிதியில், தோத்திரபூா்ணாம்பிகையுடன் திருஞானசம்பந்தா் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறாா்.

இங்கு திருஞானசம்பந்தா் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமான ஐதீக வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தில் நடைபெறும்.

நிகழாண்டு திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக திருஞானசம்பந்தருக்கு உபநயனம், திருமுறைகள் வீதி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் நிகழ்வு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னா் திருக்கல்யாண சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு வேத விற்பன்னா்கள் மந்திரம் முழங்க சிவாச்சாரியாா்கள், தோத்திர பூா்ணாம்பிகைக்கு  மங்கலநாண் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தினா்.

பின்னா் உலக நன்மைக்காக பங்கேற்ற பக்தா்கள் அனைவரும் கூட்டுப் பிராா்த்தனை செய்தனா். திருக்கல்யாண வைபவ நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கண் விழித்து வழிபட்டனா். தொடா்ந்து அதிகாலை சிவ ஜோதி தரிசனம் நடைபெற்றது.