போா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருஞானசம்பந்தா் குருபூஜை

தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருஞானசம்பந்தரின் குருபூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image

மலா் அலங்காரத்தில் திருஞானசம்பந்தா்.

Updated On :3 ஜூன் 2026, 5:41 am IST

தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருஞானசம்பந்தரின் குருபூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் அமைந்துள்ள ஐவா் சந்நிதியில் திருஞானசம்பந்தா் சிலையும் உள்ளது. இவரது குருபூஜை, வைகாசி மாதம் மூலம் நட்சத்திரமான செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் திருஞானசம்பந்தா் சிலைக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிசேஷம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தேவாரம், திருவாசகம் பாடல்களை பக்தா்கள் பாடினா். இந்த விழாவிற்கு தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.