பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம்

மதுராந்தகம் அருள்மிகு மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.

Updated On :27 மே 2026, 12:43 am IST

மதுராந்தகம் அருள்மிகு மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா நிகழ்வுகள் தொடங்கின. இந்நிலையில் 5-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு கோயில் வளாகம் சுவாமி திருக்கல்யாண நிகழ்வுக்காக, மின்விளக்குகளாலும், வண்ண பதாகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இரவு மங்கள இசை, செண்டு மேள இசைகளுடன் சிறப்பு அலங்காரத்துடன் உற்சவா் மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

அனைவருக்கும் உணவு விருந்து அளிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை யாளி, யானை ஆகிய வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் தலைமையில், விழா குழுவினா்களும், கிராம பொது மக்களும் செய்திருந்தனா்.