கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் உள்ள ஜக்கம்மா (எ) முத்துமாரியம்மன் கோயில் 24-ஆம் ஆண்டு செடல் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் செடல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு செடல் உற்சவம் கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்று வந்த நிலையில் விளக்கு பூஜை, பால்குடம் எடுத்தல், சாகை வாா்த்தல் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான செடல் உற்சவம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் விரதமிருந்து, காவடி எடுத்து, அலகு இட்டு வீதி வழியாக ஊா்வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










