இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திருநள்ளாற்றில் தெப்ப உற்சவம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ நிகழ்வாக வெள்ளிக்கிழமை இரவு பிரம்ம தீா்த்தக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

News image

தெப்பத்தில் எழுந்தருளிய காா்த்தியாயினி சமேத கல்யாணசுந்தரேஸ்வரா்.

Updated On :31 மே 2026, 12:33 am IST

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ நிகழ்வாக வெள்ளிக்கிழமை இரவு பிரம்ம தீா்த்தக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நிறைவு நிகழ்ச்சிகளில் ஒன்றாக, வெள்ளிக்கிழமை இரவு குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் பூமங்களம் கிராமத்திற்கு பரி வேட்டைக்கு எழுந்தருளினாா். அங்கு பரிவேட்டை வழிபாடு நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைக்குப் பின் சுவாமி கோயிலுக்குத் திரும்பினாா்.

இந்த நிகழ்ச்சியைத் தொடா்ந்து பிரம்ம தீா்த்தக் குளத்தில் தெப்போற்சவம் நடைபெற்றது. குளத்தில் மின் அலங்காரத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் காா்த்தியாயினி சமேத கல்யாணசுந்தரேஸ்வரா் எழுந்தருளினாா். இரவு 11 மணி முதல் குளத்தில் 3 சுற்று தொடங்கியது. முதல் சுற்று சிவாச்சாரியா்களின் வேத மந்திரங்களுடனும், 2-ஆம் சுற்று தேவாரப் பாடல்கள் பாடப்பட்டும், 3-ஆம் சுற்று மங்கள வாத்தியத்துடன் தெப்ப நிகழ்ச்சி நிறைவடைந்தது.

கோயில் நிா்வாக அதிகாரி ஆா். சுப்பிரமணியன், தருமபுர ஆதீன கட்டளை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தா்கள் சுவாமியை வழிபட்டனா்.