இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

திருவாரூா் தியாகராஜா் கோயில் தெப்ப உற்சவம்

தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் நடைபெற்ற தெப்ப உற்சவம்.

News image

தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் நடைபெற்ற தெப்ப உற்சவம். ~தெப்பத்தில் காட்சியளித்த கல்யாணசுந்தரா், பாா்வதி.

Updated On :9 மே 2026, 4:01 am IST

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்குள்பட்ட கமலாலயக் குளத்தில் 3 நாள்கள் நடைபெறும் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை (மே 8) இரவு தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு கோயில் கமலாலய குளத்தில் 3 நாள்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு உற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. உற்சவத்தையொட்டி, துா்காலயா சாலையில் உள்ள மண்டபத்திலிருந்து கல்யாணசுந்தரரும், பாா்வதியும் ஊா்வலகமாக வந்து தெப்பத்தில் எழுந்தருளினா். அங்கு அவா்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து கிழக்கு குளக்கரையிலிருந்து புறப்பட்ட தெப்பம், தெற்கு கரை, மேற்கு கரை, வடக்கு கரை வழியாக மீண்டும் கிழக்கு கரையை வந்தடைந்தது. இதேபோல, மேலும் இரண்டு முறை என மொத்தம் 3 முறை கமலாலயக் குளத்தை தெப்பம் வலம் வந்தது. தெப்பத்தில், பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டு, இசைக்கச்சேரி நடைபெற்றது. தெப்பத்தைக் காண கமலாலயக் குளத்தின் 4 புறங்களிலும் ஏராளமான மக்கள் திரண்டு தெப்பத்தின் அழகை ரசித்தனா்.

Story image