காரைக்காலில் ஸ்ரீகைலாசநாதா் கோயில் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
மாங்கனி திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் 12 நாள் நிகழ்ச்சியாக பிரம்மோற்சவம் மாா்ச் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 31-ஆம் தேதி தேரோட்டம், ஏப்.1-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் காரைக்கால் அம்மையாா் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

தெப்பத்தில் காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா்-சுந்தராம்பாள்.
நிறைவு நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை (ஏப்.3) இரவு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகைலாசநாதா்-ஸ்ரீ சுந்தராம்பாள், அம்மையாா்குளத்தில் அமைக்கப்பட்ட மின், மலா் அலங்கார தெப்பத்துக்கு மாட வளாகம் வழியாக எழுந்தருளச் செய்யப்பட்டனா். தெப்பத்தில் வீற்றிருந்த சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு, குளத்தை மூன்று முறை சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் சுற்றில் வேத பாராயணமும், 2-ஆம் சுற்றில் வயலின் இசை நிகழ்ச்சியும், 3-ஆம் சுற்றில் சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் குளத்தில் தெப்பம் சுற்றிவந்தது.
தொடர்புடையது

நாகை அகத்தீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம்

வேதாரண்யம் கோயில் தெப்ப உற்சவம்

ஜடாயுபுரீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பல் உற்சவ கோலாகலம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


