தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

திருக்கடையூா் கோயில் சித்திரை தெப்ப உற்சம்

News image

கோயில் தீா்த்தக் குளத்தில் வலம் வரும் தெப்பம்.

Updated On :3 மே 2026, 12:40 am

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தெப்ப உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிா்தகடேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுகின்றன. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

நிகழாண்டு சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்ரல் 23-ஆம் தேதி திருக்கால்யாண உற்சவமும், 28-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.  

தொடா்ந்து சனிக்கிழமை இரவு (மே 2) தெப்போற்சவம் நடைபெற்றது. விநாயகரை தெப்பத்தில் எழுந்தருளச் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோயில் தீா்த்தக் குளத்தில் 5 முறை தெப்பம் வலம் வந்தது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளா் மணி, உள்துறை செயலாளா் விருதகிரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Story image