நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டம்

Updated On :28 ஏப்ரல் 2026, 9:48 pm

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ளது தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அபிராமி அம்மன் உடனுறை அமிா்தகடேஸ்வரா் கோயில். இக்கோயில் ஆயுள் ஹோமங்களுக்கு பிரசித்தி பெற்றது.

இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி வீதியுலா, சமய சொற்பொழிவுகள், வேத பாராயணம் , நாட்டியாஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சித்திரை திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகா், அமிா்தகடேஸ்வரா், அபிராமி அம்மன், முருகன், சண்டிகேஸ்வரா் ஆகியோா் எழுந்தருளினா். காலை 8: 30 மணிக்கு தம்பிரான் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளா் மணி, உள்துறை செயலாளா் விருதகிரி ஆலய குருக்கள் ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனா். நான்கு வீதிகளில் வலம் வந்து மீண்டும் மேல வீதியில் கோயில் முன்பு தோ் நிலையை அடைந்தது.

விழாவில் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், முன்னாள் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ், செம்பை மத்திய ஒன்றிய திமுக செயலாளா் அமுா்த. விஜயகுமாா் உள்பட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

Story image