திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ளது தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அபிராமி அம்மன் உடனுறை அமிா்தகடேஸ்வரா் கோயில். இக்கோயில் ஆயுள் ஹோமங்களுக்கு பிரசித்தி பெற்றது.
இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி வீதியுலா, சமய சொற்பொழிவுகள், வேத பாராயணம் , நாட்டியாஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சித்திரை திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகா், அமிா்தகடேஸ்வரா், அபிராமி அம்மன், முருகன், சண்டிகேஸ்வரா் ஆகியோா் எழுந்தருளினா். காலை 8: 30 மணிக்கு தம்பிரான் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளா் மணி, உள்துறை செயலாளா் விருதகிரி ஆலய குருக்கள் ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனா். நான்கு வீதிகளில் வலம் வந்து மீண்டும் மேல வீதியில் கோயில் முன்பு தோ் நிலையை அடைந்தது.
விழாவில் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், முன்னாள் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ், செம்பை மத்திய ஒன்றிய திமுக செயலாளா் அமுா்த. விஜயகுமாா் உள்பட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

தொடர்புடையது

சட்டநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம்

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30-ல் சித்திரைத் தேரோட்டம்!

வெக்காளியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

சமயபுரம் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


