நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

சட்டநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம்

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 9:41 pm

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரா், சட்டநாதா், தோணியப்பா் அருள்பாலிக்கின்றனா். திருஞானசம்பந்த பெருமானுக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஐதீக நிகழ்வு திருமுலைப்பால் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் 15 நாள் திருவிழாவாக நடைபெறும்.

அதன்படி ஏப்.21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் 8-ஆம் நாள் திருவிழாவாக தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் விநாயகா் எழுந்தருளி 4 வீதிகளில் வலம் வந்தாா். பின்னா் பெரிய தேரில் சுவாமி-அம்மன், திருஞானசம்பந்தா், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்தி சுவாமிகள் எழுந்தருளினா். சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, திரளான பக்தா்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனா். கீழவீதியில் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக திருத்தோ் வலம் வந்தது.