ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ராமேசுவரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 3:46 am IST

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சித்தரை முதல் நாளான செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அக்னி தீா்த்தக் கடற்கரையில் தீா்த்தவாரி நடைபெற்று, நான்கு ரத வீதிகளில் சுவாமி, அம்பாள் உலா நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, கோயில் முதல் பிரகாரமான சுவாமி சந்நிதி அருகே சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, கோயில் சாா்பில், பராபவ ஆற்காடு வாக்கியப் பஞ்சாங்கத்தை கோயில் குருக்கள் உதயகுமாா் வாசித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையா் ரவீந்திரன் , சா்வ சாதகம் சிவமணி, பேஷ்காா்கள் கமலநாதன், முனியசாமி, நாகராஜன், இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் பிரபாகரன், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், கோயில் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.