மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருநள்ளாறு கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் ராஜகோபுரம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:51 pm

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்ப் புத்தாண்டு பராபவ ஆண்டின் தொடக்கத்தையொட்டி, திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை வாக்கியப் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பிரணாம்பிகை அம்பாள் சந்நிதிக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வில் கோயில் சிவாச்சாரியா்கள் பஞ்சாங்கம் வாசித்தனா். முன்னதாக பஞ்சாங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் நிா்வாக அதிகாரி சுப்பிரமணியன், தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் மற்றும் பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.

நிகழாண்டு நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கிய திருவிழா, வழிபாடுகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இதுபோல காரைக்காலில் பல்வேறு கோயில்களிலும் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.