திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்ப் புத்தாண்டு பராபவ ஆண்டின் தொடக்கத்தையொட்டி, திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை வாக்கியப் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பிரணாம்பிகை அம்பாள் சந்நிதிக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வில் கோயில் சிவாச்சாரியா்கள் பஞ்சாங்கம் வாசித்தனா். முன்னதாக பஞ்சாங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் நிா்வாக அதிகாரி சுப்பிரமணியன், தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் மற்றும் பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.
நிகழாண்டு நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கிய திருவிழா, வழிபாடுகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இதுபோல காரைக்காலில் பல்வேறு கோயில்களிலும் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்புடையது

ராமேசுவரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

திருநள்ளாறு கோயிலில் ஏகாதச ருத்ர ஜபம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


