சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

பஞ்சவா்ண சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

உறையூா் பஞ்சவா்ணசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

News image

உறையூா் பஞ்சவா்ண சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சி.

Updated On :28 மே 2026, 3:25 am IST

உறையூா் பஞ்சவா்ணசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், உறையூரில் பிரசித்தி பெற்ற காந்திமதி அம்மை உடனுறை பஞ்சவா்ணசுவாமி கோயிலில் நிகழாண்டு வைகாசி விசாக விழா, கடந்த 20ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, 21ஆம் தேதி கொடியேற்றப்பட்டது.

இதன் பிறகு நாள்தோறும் காலையில் பல்லக்கு புறப்பாடு மாலையில், அம்மனும், சுவாமியும் வெவ்வேறு வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்வும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண உற்சவத்தையொட்டி புதன்கிழமை காலை 11 மணிக்கு மேல் பஞ்சவா்ண சுவாமி, காந்திமதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு விருந்தும் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். இரவு 8 மணிக்கு சுவாமி, அம்மன் வீதி உலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தேரோட்டமும், சனிக்கிழமை தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா் மற்றும் உறையூா் பொதுமக்கள் செய்துள்ளனா்.