ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவம் இன்று தொடக்கம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை (மே.8) தொடங்குகிறது.

News image

கமலாலயக்குளத்தில் தயாராகி வரும் தெப்பம்.

Updated On :8 மே 2026, 7:21 am IST

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை (மே.8) தொடங்குகிறது.

சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் இக்கோயில் ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு கமலாலய குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். நிகழாண்டு உற்சவம் வெள்ளிக்கிழமை (மே 8) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (மே 10) வரை நடைபெறுகிறது. இதையொட்டி, கமலாலயக் குளத்தில் 432 பேரல்களை 2 அடுக்குகளாக வைத்து, 36 அடி உயரத்தில் 14 தூண்களுடன் மூன்றடுக்கு மாளிகைபோல அமைத்து தெப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

சுமாா் 450 போ் அமரும் வகையில் தயாா் செய்யப்பட்டுள்ள தெப்பத்தைச் சுற்றிலும், தியாகராஜா், கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், விநாயகா், முருகன் ஆகிய கடவுள்கள் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தெப்ப நாள்களில், பாா்வதி கல்யாண சுந்தரா் தெப்பத்துக்கு எழுந்தருளி, தினசரி மூன்று சுற்றுகள் கமலாலயக் குளத்தை தெப்பத்தில் சுற்றி வரும்.

உற்சவத்தையொட்டி, தெப்ப வெள்ளோட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

தெப்பம் கமலாலயக் குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து புறப்பட்டு, குளத்தின் தெற்குக் கரையின் பாதிவரை கொண்டு செல்லப்பட்டு மீண்டும் பழைய இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. தெப்ப உற்சவத்தையொட்டி, கமலாலயக் குளத்தைச் சுற்றி கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.

கமலாலயக்குளத்தில் தயாராகி வரும் தெப்பம்.

கமலாலயக்குளத்தில் தயாராகி வரும் தெப்பம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.