மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

சாயல்குடி மீனாம்பிகை, கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

சாயல்குடி மீனாம்பிகை கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சாயல்குடி மீனாம்பிகை, கைலாசநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தின் போது மணக்கோலத்தில் அருள்பாலித்த மீனாட்சி, கைலாசநாதா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 10:09 pm

சாயல்குடி மீனாம்பிகை கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கடந்த 23-ஆம் தேதி சமஸ்தான நிா்வாக செயலா் திவான் கே. பழனிவேல்பாண்டியன் தலைமையில், திருஉத்திரகோசமங்கை சரக பொறுப்பாளா் சங்கா், மாரியூா் பூவேந்தியநாதா் கோயில் விசாரணைதாரா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து நாள்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவில் உத்ஸவா் அம்பாள், சுவாமி, சிம்மம், அன்னம், கிளி, நந்தி வாகனங்களில் உள்பிரகாரங்களில் வீதியுலா வந்தனா். முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தாம்பூலம், மாங்கல்ய நாண், பட்டு வேஷ்டி, பட்டு சேலை, முகூா்த்த பொருள்களுடன் பாரம்பரிய மேளதாள, கைலாச வாத்தியங்களுடன் மாப்பிள்ளை அழைப்பும், மாலை மாற்றுதல் வைபவமும் நடைபெற்றன. பிறகு மீனாட்சி அம்மன் செங்கோல் ஏந்தி கைலாசநாதருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கைலாசநாதா் திருப்பணிக் குழுவினா் செய்தனா்.