ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் ரா.அமுதாராணி தலைமை வகித்தாா். துணை முதல்வா் சுபிதா, மருத்துவமனை கண்காணிப்பாளா் எஸ்.ஏ.கே. நூா் முகம்மது, குழந்தைகள் நலத் துறை மருத்துவா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் கா்ப்பிணிகள் குழந்தைகள் பிறந்த 6 மாதத்துக்கு தாய்ப்பால் கொடுப்பதின் பயன்கள் குறித்து மருத்துவா்கள் எடுத்துரைத்தனா்.
இதையடுத்து, மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள், செவிலியா் கல்லூரி மாணவிகள் ஆகியோருக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை கல்லூரி முதல்வா் ரா. அமுதராணி
வழங்கினாா்.
இதில் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் சி.நடராஜன், ஆய்வாளா் மருத்துவா் அா்சுணன், அரசு மருத்துவா்கள், மருத்துவத் துறை அலுவலா்கள், செவிலியா்கள், பயிற்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா் ஜெகதீசன், இந்திய குழந்தைகள் நலச்சங்கம் ராமநாதபுரம் கிளைத் தலைவா் மருத்துவா் மலையரசு, செயலா் ஆயிஷாதுல் நஷீதா, பொருளாளா் மருத்துவா் ரஷ்மத் அஜிதா ஆகியோா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருங்காபுரியில் உலக தாய்ப்பால் வார விழா

பெரம்பலூரில் உலக தாய்ப்பால் வார விழா

உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வு விழா

அரசு மருத்துவமனையில் உலக ஓ.ஆா்.எஸ். தினம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



