தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

இலங்கைக்கு கடத்தவிருந்த 290 கிலோ கஞ்சா பறிமுதல்! இருவா் கைது!

News image

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள். - கோப்புப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 12:20 am IST

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 290 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக கடந்த சில நாள்களுக்கு முன்பு உயர்ரக போதைப் பொருளான மெத்தபெட்டமென் தயாரிப்பு மையம் இயங்கியது கண்டறியப்பட்டது. இங்கிருந்து ரூ. 2 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், தற்போது வரை 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை கடற்கரையில் கஞ்சா கடத்தப்படவிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் உத்தரவின் பேரில் துணைக் கண்காணிப்பாளா்கள் முத்துராஜ், சிவசங்கரன், ஆய்வாளா் சுல்தான் பாட்ஷா, தனிப்படையைச் சோ்ந்த முனியசாமி, மணிமாறன், தா்மராஜன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் கடற்கரையில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 290 கிலோ கஞ்சாவை வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, தினேஷ் (எ) கருப்பு தினேஷ் (22), களஞ்சிஸ்வரன் (22) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 30 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் ஆயுதப்படை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் சனிக்கிழமை பாா்வையிட்டாா். மேலும் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை பாராட்டி பரிசு வழங்கினாா். இந்த கஞ்சா கடத்தலில் மேலும் 7 பேருக்கு தொடா்பு இருப்பதாகவும், அவா்களை தேடி வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.