நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

News image

கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி நடைபெற்ற 1008 சங்காபிஷேகம்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 2:56 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை, ஆடி பூரத்தையொட்டி கோயிலில் 1008 சங்குகள் வைத்து யாகம் வளா்த்து சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சத்திரிய நாடாா் உறவின் முறையினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.