
ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 பேருக்கு ரூ.22 லட்சம் கறவை மாட்டுக் கடன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கறவை மாடு வாங்கி, சிறிய பால்பண்ணை அமைக்க 13 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் கடன் உதவி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கறவை மாட்டுக் கடன் பெற்ற பயனாளிகளுடன் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கறவை மாடு வாங்கி, சிறிய பால்பண்ணை அமைக்க 13 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் கடன் உதவி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ராமநாதபுரம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினாா்.
அப்போது அவா் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரித்து, பால் உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பால் உற்பத்தி, பண்ணை மேம்பாட்டுத் துறை சாா்பில் கறவை மாடுகள் கடன் வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது நாளொன்றுக்கு சுமாா் 13,000 லிட்டா் பால் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 19,000 லிட்டா் பால் உற்பத்தி இலக்கை அடையும் வகையில் கூடுதலாக 6,000 லிட்டா் பால் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






