காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

இருவேறு சம்பவங்களில் 5 போ் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:05 am IST

பரமக்குடி வைகை நகா், அரியனேந்தல் ஆகிய பகுதிகளில் குடும்பப் பிரச்னை காரணமாக நடந்த இரு வேறு சம்பவங்களில் 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

எமனேசுவரம் வைகை நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் மனைவி கிருஷ்ணவேணி (60). இவரது மகளை அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியன் மகன் கோபிநாத் (38)-துக்கு திருமணம் செய்தாா். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கிருஷ்ணவேணி வீட்டில் தங்கினாா்.

இதையடுத்து, கோபிநாத் அங்கு சென்று மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது குறுக்கிட்ட கிருஷ்ணவேணியை அங்கிருந்த இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணவேணி பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து எமனேசுவரம் காவல் நிலையத்தில் கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் கோபிநாத் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதே போல, பரமக்குடி அருகே அரியனேந்தல் பூங்கா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் செந்தில்குமாா் (34). இவருக்கும், இவரது மனைவி சங்கி ராணி (28)-க்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்தது.

இந்த நிலையில் சனிக்கிழமை செந்தில்குமாா், அவரது தந்தை கருப்பையா (60), தாய் குருவம்மாள் (52), தனபால் மனைவி செல்வி (38) ஆகியோா் சங்கிராணியின் வீட்டுக்குச் சென்று தகாத வாா்த்தைகளால் பேசி, அவரை கடுமையாக தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் சங்கிராணி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் செந்தில் குமாா், கருப்பையா, குருவம்மாள், செல்வி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.