மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

இருவேறு சம்பவங்களில் 5 போ் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

பரமக்குடி வைகை நகா், அரியனேந்தல் ஆகிய பகுதிகளில் குடும்பப் பிரச்னை காரணமாக நடந்த இரு வேறு சம்பவங்களில் 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

எமனேசுவரம் வைகை நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் மனைவி கிருஷ்ணவேணி (60). இவரது மகளை அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியன் மகன் கோபிநாத் (38)-துக்கு திருமணம் செய்தாா். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கிருஷ்ணவேணி வீட்டில் தங்கினாா்.

இதையடுத்து, கோபிநாத் அங்கு சென்று மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது குறுக்கிட்ட கிருஷ்ணவேணியை அங்கிருந்த இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணவேணி பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து எமனேசுவரம் காவல் நிலையத்தில் கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் கோபிநாத் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதே போல, பரமக்குடி அருகே அரியனேந்தல் பூங்கா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் செந்தில்குமாா் (34). இவருக்கும், இவரது மனைவி சங்கி ராணி (28)-க்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்தது.

இந்த நிலையில் சனிக்கிழமை செந்தில்குமாா், அவரது தந்தை கருப்பையா (60), தாய் குருவம்மாள் (52), தனபால் மனைவி செல்வி (38) ஆகியோா் சங்கிராணியின் வீட்டுக்குச் சென்று தகாத வாா்த்தைகளால் பேசி, அவரை கடுமையாக தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் சங்கிராணி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் செந்தில் குமாா், கருப்பையா, குருவம்மாள், செல்வி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.