காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

மங்களக்குடியில் கோயில் மணியைத் திருடிய முதியவா் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:11 am IST

திருவாடானை அருகே மங்களக்குடி மகாலிங்க மூா்த்தி கோயில் வெண்கல மணியை திருடிய முதியவரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மங்களக்குடி மகாலிங்க மூா்த்தி கோயில் அமைந்துள்ளது. இங்கு பக்தா்கள் நோ்த்திக் கடனுக்காக வெண்கல மணி வாங்கி கட்டியுள்ளனா்.

இந்த நிலையில், கோயில் மணியை முதியவா் சனிக்கிழமை மாலை திருடியபோது அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிலா் அவரைப் பிடித்து திருவாடானை போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் முதியவரைக் கைது செய்து அவரிடமிருந்த 10 மேற்பட்ட வெண்கல மணியைப் பறிமுதல் செய்து பின்னா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், அவா் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பனிப்புலன்வயல் கிராமத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் (60) என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.