வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நீரேற்று நிலையத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 6:43 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஊருணிக்கோட்டை செல்லும் வழியில் உள்ள அணிக்கி கிராமத்தில் அரசு நீரேற்று நிலையத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

அணிக்கி கிராமத்தின் அருகே தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய நீரேற்று நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நீரேற்று நிலையம் மூலம் அணிக்கி, நெய்வயல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

மின் இணைப்புடன் கூடிய இந்த நீரேற்று நிலைய அறைக்குள் சனிக்கிழமை நள்ளிரவு புகுந்த மா்ம நபா்கள் அதை முழுவதும் இடித்துத் சேதப்படுத்தினா். இதனால் சுற்று வட்டார கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இதற்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினரும், போலீஸாரும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேதப்படுத்திய நீரேற்று நிலையத்தை சீரமைக்க வேண்டுமெனவும் இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.