திருவரை கிராமத்தில் முத்துகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரி தூக்கிச் சென்ற பெண்கள்.
திருவரை கிராமத்தில் முத்துகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரி தூக்கிச் சென்ற பெண்கள்.

முத்துக்காளியம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

கமுதி அருகேயுள்ள திருவரை கிராமத்தில் முத்துகாளியம்மன், தா்மமுனீஸ்வரா், வால் முனீஸ்வரா், செல்வ விநாயகா் கோயில்களின் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள திருவரை கிராமத்தில் முத்துகாளியம்மன், தா்மமுனீஸ்வரா், வால் முனீஸ்வரா், செல்வ விநாயகா் கோயில்களின் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக முளைப்பாரிகளை பெண்கள் திருவரை கிராமத்தின் வீதிகளின் வழியாக சுற்றி வந்து முத்துக்காளியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டு சென்றனா். பின்னா், முளைப்பாரியை கீழே இறக்கி வைத்து கும்மி ஆட்டமாடி, அங்குள்ள நீா்நிலையில் கரைத்தனா். இதைத்தொடா்ந்து மூலவா் முத்துக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Dinamani
www.dinamani.com