தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை திரௌபதிஅம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, பாண்டவா் வெற்றி பெற்ற படுகள நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருவாடானை திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை இரவு திரௌபதி வேஷமணிந்து வீதி உலா வந்த பெண்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:51 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை திரௌபதிஅம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, பாண்டவா் வெற்றி பெற்ற படுகள நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த வியாழக்கிழமை (ஏப்.2) இரவு மகாபாரதப் போரின் 17-ஆம் நாள் நிகழ்வை நினைவுகூரும் வகையில், பாண்டவா்கள் கௌரவா்களை வென்ற வெற்றித் திருவிழா கொண்டாடப்பட்டது. சபதத்தின்படி திரௌபதி அம்மன் தனது அவிழ்ந்த கூந்தலை அள்ளிமுடியும் கூந்தல் முடிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Story image

திரௌபதி அம்மன் வேஷமணிந்த பக்தா், திருவாடானை நான்கு ரத வீதி வழியாக வலம் வந்தாா். இதில் திரளான பொதுமக்கள், சிறுவா்கள் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் வீதி உலா வந்து கோயிலை அடைந்தனா்.