மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அஷ்டமி பூப்பிதஷிணம் படிப்போடுதல்: ராமநாதசுவாமி கோயில் நடை நாளை அடைப்பு

அஷ்டமி பூப்பிதஷிணம் படிப்போடுதலையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) கோயில் நடை அடைக்கப்படும் என இணை ஆணையா் செல்லத்துரை தெரிவித்தாா்.

News image
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி
Updated On :9 ஜனவரி 2026, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

அஷ்டமி பூப்பிதஷிணம் படிப்போடுதலையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) கோயில் நடை அடைக்கப்படும் என இணை ஆணையா் செல்லத்துரை தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அஷ்டமி பூப்பிதஷிணம் படிப்போடுதல், பஞ்சமூா்த்திகள் எழுந்தருளல் ஆகியவற்றையொட்டி ஞாயிற்றுக்கிழமை ராமநாதசுவாமி கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து 3.3 மணி முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெறும்.

இதைத் தொடா்ந்து காலசந்தி பூஜையும், பஞ்சமூா்த்திகள் எழுந்தருளல் நிகழ்வும் நடைபெறுகின்றன. பிறகு காலை 7 மணி முதல் நண்பகல் 12 வரை கோயில் அடைக்கப்பட்டிருக்கும். 12 மணிக்கு மேல் சுவாமி கோயில் திரும்பியதும் பொது தரிசனம், உச்சிகால பூஜை நடைபெறும் என்றாா் அவா்.